புதினம்

கைதிகளால் நிரம்பி வழியும் இலங்கை சிறைச்சாலைகள்

இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளும் அளவிற்கதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக சிறைவைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 13,200 ஆகும். இருப்பினும் அனைத்து சிறைகளிலும் இருமடங்கிற்கும் அதிகமான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 25ம் திகதிவரைக்குமான கணிப்பின்படி,...

யாழ்-திருச்சி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்! – (f)பிட்ஸ் எயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைவில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாக (f)பிட்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு...

உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்

பாடசாலைகளுக்கிடையேயான தேசிய உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் இளவாளை புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியை எதிர்கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி, இறுதிவரை மிகவும் சிறப்பாக விளையாடி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆனது. https://puthinam.news/mahajana-college-football-champion/ https://puthinam.news/jaffna-st-patricks-college-champion/

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்

பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது. பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது. இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த மன்னார் புனிய சவேரியார் கல்லூரி மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இறுதிவரை மிகவும்...

உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை

அகில இலங்கை பாடாசாலைகளுக்கிடையேயான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி இரண்டு பிரிவுகளில் தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளது. மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிகளே தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளன. 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப்போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பலம் வாய்ந்த குருநாகல் பெண்கள் மலியதேவ...

அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்

தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 68. தமிழரின் அடையாளம்.தமிழரின் பெருமை.தன்னிகரில்லா தலைவன். 1954ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்த திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தனது வாழ்நாளை தமிழரின் விடிவிற்காய் முழுமையாக அர்பணித்திருந்தார்.

ஒரு மில்லியன் டொலர்களை வழங்கும் ஐக்கிய இராச்சியம்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுக்காப்பை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகின்றது. மேற்படி நிதியை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கொழும்பு, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, தங்காலை, மாத்தறை, மன்னார், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும். தெரிவு செய்யப்பட்ட...

கடுமையாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் சட்ட திருத்தம்

இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த, நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று(24/11) முதல் அமுலிற்கு வந்துள்ளது. இதன்படி, 5g அல்லது அதற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருட்களை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க முடியும். இதேபோன்று, 500g முதல் ஒரு கிலோ...

இதுவரை 209பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையிலிருந்து இதுவரை 209 பேர் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளனர். கடந்த புதன்கிழமை, மன்னாரில் இருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட பத்து இலங்கையர்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மக்களை படகு மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் படகோட்டிகள், அவர்களை மணற்திட்டில்...

முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே, கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வரும் மாதம் 16ம்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img