புதினம்

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார அணி மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறையினரின் பிரிவிற்குட்பட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் பெண்ணொருவர் உட்பட மூவர் காயப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்தவர்களுகு இடையூறு விளைவித்து, பொல்லுகளால் தாக்குதல்...

அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?

யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,  மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை...

கம்மன்பிலவின் கடந்த காலம் குறித்து மக்கள் ஆராய வேண்டும் – ரஞ்சன்

கடந்த காலங்களில் சுய அரசியல் இலாபங்களிற்காக இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த உதய கம்மன்பிலவின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி மக்கள் ஆராய வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி,  முஸ்லிம் தமிழ் மக்களிடையே இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்து, 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட மிக முன்னிற்று செயற்பட்டவர் உதய...

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது

பிந்திய இணைப்பு அறுகம்பேயில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினால், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முந்திய செய்தி இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்...

T20 போட்டியில் சிம்பாவே அணி உலக சாதனை

சிம்பாவே கிரிக்கெட் அணி சர்வதேச இருபதுக்கு இருபது (T20) கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளது. கம்பியாவிற்கு எதிராக இடம்பெற்ற தகுதிகான் போட்டியில் சிம்பாவே அணி 344 ஓட்டங்களைக் குவித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. 4 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்ற சிம்பாவே அணியில் சிக்கந்தர் ரஸா 133 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சிம்பாவே...

15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு

திருகோணமலையில் 1985 இற்குப் பின்னர் தமிழர்களது 15,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். வன இலாகா 4,000 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 2,600 இற்கும் மேற்பட்ட ஏக்கர், துறைமுக அதிகார சபை 5,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர், பெளத்த...

யாழில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

யாழ் மாவட்டத்தில் போதை மாத்திரைகளின் பாவனை மிக வேகமான அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மானிப்பாய் மற்றும் ஏழாலை பகுதிகளில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மானிப்பாயில் 1,400 மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலையில் 840 மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவரிடையே போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளமையானது அவர்களது கல்வி நடவடிக்கைகளை...

இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம்

இலங்கையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால், இஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜகைகளை சில சுற்றுலா பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுள்ளது. குறிப்பாக, மிக முக்கிய சுற்றுலா தளமான அறுகம்பே உட்பட இலங்கையின் தென் பகுதி மற்றும் மேற்கு பகுதி பிரபல கடற்கரையோரங்களில் மேற்குலக சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்...

உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன் 

வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்குள் உட்பூசல்கள் செய்து நமது வாய்ப்புக்களை தாரை வார்த்துக்கொடுத்து, தமிழ் மக்களை கல்வியில் நலிவுறச் செய்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்து  தமிழர்களை புலம்பெயர் தமிழராக்கி விட்டு, மக்களுக்கென்று எதுவும் செய்யாமல்...

அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு

வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார். படித்த-புதிய-இளம் வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார். வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img