உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை

அகில இலங்கை பாடாசாலைகளுக்கிடையேயான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி இரண்டு பிரிவுகளில் தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளது.

மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிகளே தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளன.

20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப்போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பலம் வாய்ந்த குருநாகல் பெண்கள் மலியதேவ மகாவித்தியாலத்தை 3 : 0 என்ற கோல் கணக்கில் வென்று தேசிய மட்டத்தில் சாம்பியனானது.

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணி

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில், மகாஜனா கல்லூரி பொலனறுவை பண்டிவெவ மகாவித்தியாலத்துடன் மோதி 2:0 என்ற கோல்கணக்கில் வென்று தேசிய மட்டத்தில் சாம்பியனானது.

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணி

ஒரே பாடசாலையில் இரண்டு அணிகள் தேசிய மட்டத்தில் சாம்பியனாகி, பாடசாலைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளன.


Latest articles

Similar articles