இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே, கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வரும் மாதம் 16ம் திகதி (16/12) கோத்தபாய ராஜபக்ச சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்.