இலங்கையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுக்காப்பை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகின்றது.
மேற்படி நிதியை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கொழும்பு, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, தங்காலை, மாத்தறை, மன்னார், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்.
தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு மாதாந்தம் 47 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 17,000 ரூபாய்) வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.