புதினம்

உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்

உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், இதனால் கிவ், லிவிவ் மற்றும் ஒடேசா பிராந்தியங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் உறைபனி குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், மின்சாரமின்றி வாழ்வது...

யாழில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது

போதை மாத்திரைகள் விற்ற யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையில், 19 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களை 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்தபோது, மல்லாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமே தாம் போதை மாத்திரைகளை வேண்டியதாக...

மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

மாவீரர் வாரம் இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். ஒவ்வொரு வருடமும், நவம்பர் 21 முதல் 27 வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை உலகமெங்கும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமையாகும். கடந்த பல வருடங்களாக...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், படைப்பலம் பிரயோகிக்கப்படும் – ரணில்

இன்னொரு மக்கள் ஆர்ப்பாட்டம் மூலம் ஆட்சியைக் கலைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (23/11) பாராளுமன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இலங்கை காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி, பொது மக்களுக்கு இடையூறு இன்றி எவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் அனுமதிக்கப்போவதில்லை...

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன்

இலங்கை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (21/11) இடம்பெற்றபோது, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா மேற்படி நியமனத்தை வழங்கினார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்டத்தில் அதிகளவு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொலமன் தீவுகள் அருகே பாரிய நிலநடுக்கம்

சொலமன் தீவுகள் அருகே 7.0 மெக்னிடியூட் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10km ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால், சொலமன் தீவுகளில் 30cm தொடக்கம் ஒரு மீட்டர் வரையிலான சுனாமி அலைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்து மற்றும் பப்புவா நியுகினியா நாடுகளிலும் 30cm வரையிலான சுனாமி...

இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இதுவரையில் 162பேர் உயிரிழந்துள்ளனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 10km ஆழத்தில் 5.6 மெக்னிடியூட் எனும் அளவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பம், தலைநகர் ஜகார்த்தாவரை உணர முடிந்துள்ளது. பூகம்பத்தின் பின்னர் 25 இற்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்ச்சிகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன. பூகம்பதினால் 13,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான...

56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF

இலங்கையில் 22.6 இலட்சம் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றன குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. 56,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கின்மை நிலையிலுள்ளனர் என...

15 வயதில் தேசிய அடையாள அட்டை கட்டாயம்

இலங்கையில் 15 வயதைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருடத்திற்குள், தேசிய அடையாள அட்டையை (NIC) கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் பெற்ற ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேற் குறிப்பிட்டபடி, உரிய கால எல்லைக்குள் விண்ணப்பிக்கத் தவறுபவர்களுக்கு...

இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள்

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையால் புதையிரத திணைக்களம் பல வழிகளிலும் பாதிப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக புகையிரத உதிரிப்பாகங்கள் மற்றும் தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. புகையிரதங்கள் தடம் புரள்வதற்க்கு...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img