புதினம்

இலங்கையில் வேகமாகப் பரவும் டெல்டா வைரஸ்

இலங்கையில் கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. டெல்டா வகை வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பிரதான வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலையும் காணப்படுகிறது. மேலும் ஆதார வைத்தியசாலைகளும் தொற்றாளர்களினால் நிரம்பி வழிவதால், இலங்கை சுகாதாரத் துறை பாரிய சவால்களை...

ஒன்பது மாதங்களின் பின்னர் விமான நிலையங்கள் திறப்பு

இலங்கையில் ஒன்பது மாதங்களின் பின்னர் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இன்று (21/01) சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகத் திறக்கப்பட்டன. இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச விமான நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன. இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளிற்கு இணையம் மூலமாக மட்டுமே விசா வழங்கப்படும் எனவும்...

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்

பல சர்ச்சைகளின் பின்னர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென். கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கெதிராக போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடென், கடும் போட்டியின் மத்தியில் வெற்றி பெற்றிருந்த்தார். தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கு பெறுவதையும் தவிர்த்துக்கொண்டார்.இதேவேளை புதிய...

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (11/01/21) பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்படமையைக் கண்டித்து இந்த ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என்பன முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளன.வழமைபோல் இராணுவத்தினர் அல்லது காவல்துறையினர் வர்த்தகர்களை...

தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு

யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியையே இலங்கை அரசின் உத்தரவிற்கமைய, துணைவேந்தரின் வழிநடத்தலில் இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை உளரீதியில் சீண்டிப் பார்க்கும் இலங்கை அரசின்...

அமெரிக்கா, பிறேசில், இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

அமெரிக்கா, பிறேசில் மற்றும் இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நேற்று மட்டும் அமெரிக்காவில் 3,409 பேரும், பிறேசிலில் 1,186 பேரும் இங்கிலாந்தில் 830 பேரும் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் நேற்று மட்டும் 219,966 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இங்கிலாந்தில்...

EPDP ஆதரவுடன் மணிவண்ணன் யாழ் மேயராக தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாநகர முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஈபிடிபி கட்சியின் பத்து உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழ் காங்கிரசின் பத்து உறுப்பினர்களும் மணிவண்ணனிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆனோல்ட் இருபது வாக்குகளைப் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனோல்ட்டிற்க்கு ஆதரவாக தமிழ்த்...

அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடென்

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகிறார் ஜோ பைடென். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடென் 270 இற்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுள்ளதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் இரண்டு மாநிலங்களின் முடிவு இன்னும் வெளியாகாவில்லை. இருப்பினும் 75 மில்லியனுக்கும் மேலான வாக்குகளை ஜோ பைடென் பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட்...

மீண்டும் முடங்கும் (f)பிரான்ஸ்

ஐரோப்பா கண்டத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக (f)பிரான்ஸ் மீண்டும் நாடளாவியரீதியில் முடக்க நிலைக்குச் செல்கிறது. வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து (30/10) நவம்பர் மாதம் இறுதிவரை இந்த முடக்க நிலை அமுலில் இருக்குமென (f)பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் இரண்டாம் அலை, முதலாவது ஏற்படுத்திய தாக்கத்தைவிட கடுமையாக இருக்குமென தெரிவித்துள்ள...

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பொம்பியோ, இன்று (28/10) இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். சீனாவின் முழு ஆசீர்வாதம் பெற்ற மகிந்த குடும்பம் இலங்கையை ஆண்டு வரும் தற்போதைய நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வியஜம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img