யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ்

2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி பிரஸ்தாபிப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாணங்களில் அடிப்படையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பில் பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றில் தெரிவித்த கூற்றிற்கு பதிலடியாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

Latest articles

Similar articles