இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருமளவு வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினால், சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.