ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் ஆகியோர் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதன்மையாக இருந்ததாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30/08) கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நபரான முஹமட் நிசாம்டீன் (25) எனப்வரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்கள், மற்றும் குறிப்புகளை ஆய்வு செய்ததில் இருந்தே மேற்படி தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பல்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த முஹமட் நிசாம்டீன், அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றிலேயே தற்காலிக (contract) அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.