பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் சிட்னி நகரில் வைத்து நேற்று (30/08) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் தேசிய காவல்துறையினர் (AFP) தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய முஹமட் நிசாம்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபருக்கு, பிணை அனுமதி மறுக்கப்பட்டு வரும் 24/10/2018 வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.