கடந்த ஞாயிறு (21/04) இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என இலங்கை சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் அணில் ஜெயசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் 359 பேர் இறக்கவில்லை என்றதும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 485 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.