மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஆய்வு நடத்த வரவிருந்த ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரியின் விஜயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ தனது பணிகளில் நடுநிலமையுடன் செயற்படாததனால் அவர் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு கூறியுள்ளது.
இதுபற்றி யாங்ஹீ லீ குறிப்பிடும்போது, மியான்மாரில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறுகிறது என்பதனையே எனக்கு வித்த்க்கப்பட்டுள்ள பயணத் தடை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மியான்மாரில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(நன்றி : அல் ஜஸீரா)