மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று (26/10) பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார்.

வரும் 5ம் திகதி, பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இருப்பினும், தானே இன்னும் இலங்கையின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்றும், பாராளுமன்றில் என்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி, பிரதமர, மற்றும் மஹிந்த அணியினர் உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகள்  இந்தியாவிற்கு அடிக்கடி விஜயங்களை மேற்கொண்டதன் நோக்கம் இதுவாகத்தான் இருக்குமென நம்பப்படுகிறது.

Latest articles

Similar articles