பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் பல பிரிவுகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பதால், எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற மாட்டாது என நம்பப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடுதழுவியரீதியில் தற்காலிகமாக எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் இடம்பெற்றுவருகின்றமையால், பாதுகாப்புக் கருதி எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பினும், வன்முறைச் சம்பவங்கள் சிறிய அளவில் இன்னும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்களின் தீ வைப்புச் சம்பவங்களுக்கு எவ்வாறு எரிபொருள் கிடைக்கின்றது என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் இன்னும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.