புதினம்

IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேருக்கு வலைவீச்சு

இலங்கை காவல்துறையினர் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேரை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2013 முதல் இலங்கையிலுள்ள சில இளைஞர்கள் (பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்) IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகளில் பங்குபற்றிவருவதாக தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அவர்களை எப்படியும் காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கை பூராகவும் 10,000...

பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலுள்ள படத்திலுள்ளவர்கள் பற்றி தகவல்கள் ஏதும் தெரியுமாயின், தயவுசெய்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறியத்தரவும் என இலங்கை காவல்துறை பொது மக்களைக் கேட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்கள் : 071...

பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் பதவி விலகல்

பிந்திய இணைப்பு : காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தானாக பதவி விலகாததினால் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.பதில் காவல்துறை மா அதிபராக C.D.விக்ரமரத்னா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தும்,...

இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485

கடந்த ஞாயிறு (21/04) இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என இலங்கை சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் அணில் ஜெயசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் 359 பேர் இறக்கவில்லை என்றதும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 485 என்றும் அவர்...

நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள்

கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றதின் பின்னணியை நோக்கும்போது, இது உலகளாவியரீதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களின் ஒரு பகுதியே என்று தோன்றுகிறது. (இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் நடந்தவைபோன்று) .அதேபோல், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் மேற்கத்தைய நாட்டினரை இயன்றளவு கொலை செய்வதே பயங்கரவாதிகளின்...

இலங்கை தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள IS பயங்கரவாதிகள்

இலங்கையில் நடந்த கொடூர தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமா IS உரிமை கோரியுள்ளது. ஏழு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதில் தமது உறுப்பினர்கள் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித் தனியாக தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள் என்றும், இறுதியான ஒருவர் தெமட்டகொட...

அரச பாடசாலைகள் 29ம் திகதி முதல் ஆரம்பம்

இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் வரும் 29ம் திகதி (29/04) முதல் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 22ம் திகதி (22/04) ஆரம்பமாக இருந்த பாடசாலைகள், நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளினால் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம்

ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.பயங்கரவாத தடைச் சட்டம் மூலமாக காவல்துறையினர் மற்றும் முப்படையினருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்கின்றன.தொடர்...

பயங்கரவாதச் செயல் தொடர்பாக பலர் கைது, இன்டர்போல் களத்தில்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, வத்தளை, மாதம்பை, தம்புள்ளை, வெல்லம்பிட்டி, மன்னார், கந்தானை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை போன்ற பகுதிகளிலிருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என அறிய முடிகிறது. மேலும் இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில்...

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு

பிந்திய இணைப்பு 26-04-2019 : இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485நேற்றைய தினம் (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 521 ஆகவும் உயர்ந்துள்ளது.தாக்குதல் தொடர்பாக இதுவரை 40பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img