அரச பாடசாலைகள் 29ம் திகதி முதல் ஆரம்பம்

இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் வரும் 29ம் திகதி (29/04) முதல் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் திகதி (22/04) ஆரம்பமாக இருந்த பாடசாலைகள், நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளினால் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles