இலங்கை காவல்துறையினர் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேரை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2013 முதல் இலங்கையிலுள்ள சில இளைஞர்கள் (பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்) IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகளில் பங்குபற்றிவருவதாக தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அவர்களை எப்படியும் காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கை பூராகவும் 10,000 படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.