யாழில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது

போதை மாத்திரைகள் விற்ற யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையில், 19 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களை 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரணை செய்தபோது, மல்லாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமே தாம் போதை மாத்திரைகளை வேண்டியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை காவல்துறையினர், 36 வயதுடைய பெண் ஒருவரை மல்லாகத்தில் கைது செய்தனர். இவரிடமிருந்து 40 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles