புதினம்
Local news
வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 15,622பேர் பாதிப்பு
புதினம் -
தொடரும் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 15,622பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இதுவரையில் 29 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், 7,025பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வலுவான தாழமுக்கத்தால் கடும் மழைவீழ்ச்சி ஏற்படும் என இலங்கை...
Local news
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் மற்றும் சிசு
புதினம் -
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் உயிரிழந்தமை தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரால் அமைக்கப்பட்ட விசேட குழு மன்னார் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பத்து வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த 28 வயதுடைய பெண், கர்ப்பமாகி முதல் பிரசவத்திற்காக...
Articles
முழுமை பெறாத அமைச்சரவை
புதினம் -
இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுக்கள் இன்னும் ஜனாதிபதி வசமே உள்ளன. இரண்டு பெண்கள் உட்பட 21 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைசரவை காணப்படுகிறது. கடந்தகால அரசாங்களில் அமைச்சரவையில் 50 வரையிலான...
Local news
தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு
புதினம் -
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வவுனியாவில் போட்டியிட்டு தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இளையவர்களை உள்வாங்குவதாக தெரிவித்து போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இறுதியில் தமக்கு விசுவாசமானவர்களை முன்னுரிமைப்படுத்தும் வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட இளம் சட்டத்தரணி செ.டினேசன் சத்தியலிங்கத்தை விட 2,500 இற்கும்...
National news
அடங்காத அசுரன் மகிந்த!
புதினம் -
அரசியலில் இருந்த் ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட மகிந்த ராஜபக்ச, தொடர்ந்தும் அரசியலில் இருக்கவே விரும்புகிறார். மற்றைய ஜனாதிபதிகள் போல் ஓய்வெடுக்கும் எண்ணமே இல்லைப் போல் தோன்றுகிறது. இந்த பொதுத்தேர்தலில் தாம் எதிர்பார்த்த அளவு ஆசனங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ச, வெற்றிக்கான...
Local news
தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்
புதினம் -
வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு இம்முறை எட்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றமை, அக்கட்சிக்கு ஒரு வகையில் வெற்றியே. கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்குப் பின்னர் சந்திக்கும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். கடந்த காலங்களில் டெலோ, புளொட் மற்றும் சிறிய...
National news
159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி
புதினம் -
இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாரிய மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள் என மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்கள். இலங்கை வரலாற்றில் தனிக்கட்சியாக 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 159 ஆசனங்களைப் பெற்று...
Local news
யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்
புதினம் -
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக்...
Local news
வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி
புதினம் -
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்று, வடக்கு அரசியல் கட்சிகளுக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காலம் காலமாக கோலூச்சி வந்த தமிழரசுக் கட்சியை...
Local news
யாழ்ப்பாண தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
புதினம் -
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றுள்ளது. செல்லுபடியான 23,631 வாக்குகளில், 9,066 (41.46%) வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...