இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை

கடந்த 25ம் திகதி கொழும்பில் தமது தூதரக பணியாளர் ஒருவரை வீதியில் வைத்து பலவந்தமாக விசாரணை செய்து, கடத்த முற்பட்டமை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கடத்தல் முயற்சி சம்பந்தமாக ஊடகங்களில் பலவிதமான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதையடுத்து, சுவிஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், 25/11/2019 தமது அலுவலக பணியாளரை இனம் தெரியாத நபர்கள் வழிமறித்து, பலவந்தமாக காரில் ஏற்ற முற்பட்டதாகவும், கடுமையாக மிரட்டி தூதரகம் சம்பந்தமாக தகவல்களை கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles