கடந்த மாதம் (30/08) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) இன்று (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கையெழுத்தைப் பரிசோதிக்கும் நிபுணர்களின் அறிக்கையின்படி, நிசாம்டீனின் கையெழுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை என நீதிமன்ற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், வடக்கு சிட்னியிலுள்ள அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Bail granted to my client Mohamad Nizamdeen today. Police case is hopeless, as notes in question are not his! We will continue to seek justice until my client is fully exonerated.
— Moustafa Kheir (@Mouskheir) September 28, 2018