சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் வரும் 18ம் திகதி (18/04/2022) அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் D.Cஇல் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
கோத்தபாய அரசின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி, புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் K.M.M.சிறிவர்த்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரே இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறுகின்றனர்.