இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 184 பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மேற்படி தரவுகள் அரச அதிகாரிகளால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமான தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான இறப்பு மற்றும் தொற்று வீதம் அதிகம் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இலங்கையில் ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக எந்தவொரு ஊடகமும் உண்மையான நிலமையினை வெளியிட அஞ்சுகின்றன.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி கடந்த வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி காணப்படுகிறது. நாடு தொடர்ந்து முடக்கப்படிருப்பதாலும், தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக இடம்பெறுவதாலும், வரும் நாட்களில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

Latest articles

Similar articles