இலங்கையில் நேற்றுவரையில் (03/09) ஒன்பது மில்லியன் மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திலிருந்து 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு மேல்மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.