இலங்கையில் இடம்பெறும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேற்படி காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்கும்வகையில், தற்காலிகமாக சமூக வலைத்தளங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.