பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்பு

இலங்கையில் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடின் காரணமாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் நாடு பூராகவும் 67 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 10,115 லீற்றர் டீசல், 5,690 லீற்றர் பெற்றோல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய் போன்றன மீட்கப்பட்டுள்ளதுடன், பதுக்கலில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest articles

Similar articles