மீண்டும் ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று (16/12) காலை இலங்கை நேரப்படி 11:16 மணி சுபநேரத்தில் இடம்பெறவிருந்த மீள் பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதியின் தாமதத்தினால் சிறிது நேரம் கழித்தே இடம்பெற்றது.

‘இனி ஒருபோதும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்’ என தெரிவித்திருந்த ஜனாதிபதி, உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் பின்னர், வேறு வழியின்றி ரணிலை பிரதமராக ஏற்றுக்கொண்டார்.

ரணிலின் தலமையிலான புதிய அமைச்சரவை இன்று அல்லது நாளை நியமிக்கப்படும் என அறியமுடிகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles