ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்படி பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.