மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார்

எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையும் இராஜினாமா செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இன்று கொழும்பில் இடம்பெற்ற கலவரத்தால், மற்றைய கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான முடிவுகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

Latest articles

Similar articles