கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று (14/12) உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, மஹிந்த வகித்த பிரதமர் பதவி மற்றும் ஏனைய உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகள் செல்லுபடியற்றதாகியது.
இதனைத் தொடர்ந்து, இன்று (15/12) அவர் கொழும்பிலுள்ள இல்லத்தில் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து ராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.