அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணைந்து சிறப்பானதொரு நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். நாட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தையும் சரிசெய்து, நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல தனது நிர்வாகம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுமென பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.