கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை தான் பிரதமராக பதவியேற்கும்படி கேட்டதாகவும், அவர்கள் நிராகரித்த பின்பே மஹிந்த ராஜபக்சவை தான் பிரதமராக நியமித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “என்னால் ரணிலுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போனபோது, நான் கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை பிரதமராக பதவியேற்கும்படி கேட்டேன். ஆனால் அவர்கள் ரணிலுக்கு எதிராக தம்மால் பதவியேற்க முடியாது எனத் தெரிவித்தார்கள். அதன் பின்னர் நான் எல்லோருடனும் ஆலோசித்தபின்னர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தேன். தான்தோன்றித்தனமாக நான் எதையும் செய்யவில்லை. அரசியலமைப்பிற்கு அமைவாகவே நான் பிரதமர் நியமனத்தை மேற்கொண்டேன். சமய மதகுருமார்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் என எல்லோரும் என்னை சந்தித்திருந்தார்கள். எல்லோருக்கும் விளக்கமளித்துள்ளேன். ஆகவே நான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நேற்று( 05/11) நடைபெற்ற மக்கள் பேரணியில் பங்கு பற்றிய மஹிந்த மற்றும் மைத்திரி, நான்கு வருடங்களின் பின்னர் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.