புதினம்
Local news
கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிரே காரணம்!
புதினம் -
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிர் காலநிலையே காரணம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உயிரிழந்த கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த குழு தமக்கு தொலைபேசியூடாக விபரத்தை தெரிவித்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1,660 இற்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும்...
National news
போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு – இ.ஆ.ச
புதினம் -
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போசாக்கின்மையால் பெருந்தோட்டப் பகுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2.9 மில்லியன்...
Local news
போராளிகள் நலன்புரிச் சங்கம்
புதினம் -
"இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்" எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பிரபல சட்டத்தரணி தவராசா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். போர் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் இன்னும் பாரிய இடர்களை...
Local news
பனங்கள்ளு ஏற்றுமதி, $45,000 வருமானம்
புதினம் -
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பனங்கள்ளு மூலம் 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் வட மாகணத்திலிருந்து பெறப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள்ளு, முதன் முதலாக (f)பிரான்சிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமே 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தற்போது அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவு பனங்கள்ளு ஏற்றுமதி...
National news
நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித்
புதினம் -
பெளத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைவஸ்து பாவனைக்கெதிராக கடும் சட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, கஞ்சா பயிர்செய்கையை சட்டமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேராயர் குற்றம் சாட்டினார். மேலும், வெளிநாடுகளில் படித்தவர்கள் இலங்கைக்கு வந்து இரவு நேர...
Local news
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம்
புதினம் -
இலங்கையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த இரு நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் கால்நடைகள் சடுதியாக உயிரிழந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு இறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கால்நடைகளின் சடுதியான உயிரிழப்பைத்...
Local news
யாழ் குப்பிளானில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது
புதினம் -
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 38 வயதான பெண்ணிடமிருந்து 130g ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் சுன்னாகம் காவல்துறையினரிடம் யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள்...
National news
சூதாட்ட நிலையங்கள் 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை – ஹர்ஷா
புதினம் -
இலங்கையில் உள்ள 4 பிரதான கசினோ சூதாட்ட நிலையங்கள் கடந்த 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட நிலையங்களிலிருந்து அறவிடப்படவேண்டிய சுமார் 200 மில்லியன் ரூபாய் வரியை முறையாக அறவிட்டால், தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம்,...
Local news
கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி
புதினம் -
தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலேயே மேற்படி கால்நடைகள் பலியாகியுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள மக்களை தற்போது சீரற்ற காலநிலையும் கடுமையாகத்...
National news
நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்
புதினம் -
பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
