யாழ் குப்பிளானில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 38 வயதான பெண்ணிடமிருந்து 130g ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் சுன்னாகம் காவல்துறையினரிடம் யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை பரப்பப்பட்டு வருவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றபோதிலும், எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

Latest articles

Similar articles