முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான முருகன், சாந்தன், ரொபேட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நால்வரையும் விரைவாக இலங்கைக்கு நாடுகடத்தும்படி தமிழ்நாட்டு அரசுக்கு மத்திய உள்ளவிவகார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் இவர்களில் சிலர் இலங்கை தவிர்ந்த வேறு நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் 32 வருடகாலம் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் கடந்த வாரம் ஆறு பேரும் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.