அவசர மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி உடனடி உதவியாக 10 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலதிக மருந்துப் பொருட்களின் கொள்வனவு மற்றும் எரிவாயு இறக்குமதிக்கென, மேலும் 500 மில்லியன் டொலர்கள் வரும் இரு வாரங்களுக்குள் உலக வங்கி வழங்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.