இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் காரணிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அவரச கடிதம் எழுதியுள்ளது.
அரச மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவ சங்கம், ஜனாதிபதியுடனான அவசர சந்திப்பிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விரைவில் மருத்துவப் பொருட்கள் கிடைக்கப்பெறாவிடின், அவசர சிகிச்சைகள் மேற்கொள்வது சாத்தியமற்றதாகிவிடும். மேலும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் இதுவரை இலங்கையில் ஏற்பட்ட போர், சுனாமி மற்றும் கொரோனா போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளிலும் பார்க்க மிக அதிகமாக இருக்கும் எனவும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.