மஹிந்த ஆட்சியில் ரஸ்சியாவிற்கான இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச போலீசாரால் (INTERPOL) கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மிக் 27 ரக விமான கொள்வனவு ஊழலில் சம்பந்தப்பட்டிருந்த இவரை கைது செய்ய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இவர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கின உறவினர் என்பதுடன், மஹிந்த குடும்பத்தால் சேர்க்கப்பட்ட பல சட்ட விரோத சொத்துக்கள் இவரது பெயரில் வெளிநாடுகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.