ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி புத்த பிக்கு ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று(19/04) காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார்.
தெரிபஹா சிறிதம்ம எனும் புத்த பிக்குவே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு கம்பஹா மாவட்டதிலுள்ள ரதுபஸ்வல கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க போராடி வெற்றிகண்ட ஒரு பிரபலமான புத்த பிக்கு ஆவார்.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகும்வரை தான் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் அவர் திடமாகத் தெரிவித்துள்ளார்.