சிரியாவில் மீண்டும் நச்சு வாயு தாக்குதல் 70பேர் பலி

சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மிருக குணமுள்ள சிரிய அதிபர் அஸ்ஸாட்டிற்கு ஆதரவு வழங்கும் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஈரானிய அதிபர் ஆகியோரே இந்த நச்சு வாயு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவேண்டும் என ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles