அமெரிக்காவின் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, கடந்த முதலாம் திகதி(01/05) அமெரிக்க வாழ் இலங்கையர்களினால் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரலாற்றில், அமெரிக்காவில் இலங்கையர்கள் நாடு தழுவியரீதியில் மேற்கொள்ளும் பாரிய அரச எதிர்ப்புப் போராட்டம் இதுவாகும்.

இலங்கையைப் பாதுகாப்போம்‘, ‘பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும்‘, ‘குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்‘, ‘ஊழல் மிக்க அரசாங்கம் நீக்கப்பட வேண்டும்‘, ‘இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்‘ போன்ற பல அரச எதிர்ப்பு கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எழுப்பியிருந்தனர்.

மேலும் அமெரிக்காவின் குடியுரிமையைக் கொண்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் மற்றும் வருமானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, அமெரிக்க அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றிலும் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles