ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், வரும் மே மாதம் முதலாம் திகதி (01/05/2019) முதல் ஆறு மாதங்களுக்கு விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கருமபீடங்களில் இலவசமாக உள்நுழைவு விசாவினைப் (on arrival visa) பெற்றதுக்கொள்ள முடியும் முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.