தற்போது இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மகிந்த ராஜபக்சவின் நண்பருமான சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இலங்கை மக்களின் கோபத்தை, இந்தியாவிற்கு எதிராக சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றன. எனவே இந்தியா உடனடியாக இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அரசியல் ஸ்திரத்தன்மையை சீராக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.