இன்றுமுதல் பெற்றோல், டீசலின் விலையை அதிகரிக்கிறது LIOC

இலங்கையில் இன்றுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கிறது லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவனம் (LIOC).

ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுகிறது. LIOC இந்த மாதத்தில் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பாக இதுவரை எவ்வித அறித்தலையும் விடுக்கவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles