இலங்கை விவகாரத்தை பா.ஜ.க அரசு சரியாகக் கையாளவில்லை என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இலங்கை அரசியலில் நடைபெற்றுள்ள தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழக மீனவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.