இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 5ல் தேர்தல்

இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலைத்துள்ளார்.

வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி (05/01/2019) புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று, 17ம் திகதி புதிய பாராளுமன்றம் கூடுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அரசமைப்பின் 19ம் திருத்தத்தினை மீறி நடந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நிலவுவதால், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த்துள்ளார்.


Latest articles

Similar articles