சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய

இலங்கையில் சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

முகநூல், வாட்ஸ்ஆப், யுரியூப், வைபர், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருவதால், அரசாங்கம் மேற்படி சர்வாதிகார நடவடிக்கையை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினூடாக அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கும்படி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக முடக்கமாக இருப்பினும், நிரந்தரமாக முடக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிந்திய இணைப்பு

சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கம் பிற்பகல் 3:30 மணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles