தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு இராணுவ வீரரும் தமது பதவிகளை வெளிப்படுத்தக்கூடாதென்றும், சீருடையுடன் மற்றும் இராணுவ தளபாடங்களுடன் இருக்கும் படங்களை பதிவேற்றக் கூடாதெனவும் சகல இராணுவ வீரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.