இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், பிரதமர் உட்பட முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்தாலும், சட்டத்தின்படி ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஜனாதிபதி மீது பாராளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தலாம்.

நாளைய தினம்(04/05) வாக்களிப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசில் இருந்து பிரிந்த கட்சிகள் மற்றும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான முகம் வாக்கெடுப்பின்போது மக்களுக்குத் தெரியவரும்.

Latest articles

Similar articles